JUSTIN: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஏப்ரல் 1 முதல் ஈஸியா சிங்கப்பூருக்குள் வரலாம் – செம்ம அறிவிப்பு!

கோவிட்-19 தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் pre-departure கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் எளிமையாக நுழைய முடியும்.
மேலும், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுள்ள குழந்தைகளும் சிங்கப்பூருக்குள் எளிமையாக வரலாம்.
வெளிநாட்டு கட்டுமான ஊழியர் எதிர்கொண்ட வறுமை; கடை உடைத்து திருட்டு….சிறை தண்டனை விதிப்பு!
சிங்கப்பூர் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான மிக முக்கியமான எளிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்
பயணிகள் தனிமை இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைய நியமிக்கப்பட்ட விமானங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டியதில்லை.
மேலும் சிங்கப்பூர் வந்த 24 மணி நேரத்திற்குள் கோவிட்-19 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) எடுக்க வேண்டியதில்லை.
தினசரி வருகையாளர்களின் எண்ணிக்கை ஒதுக்கீடுகளில் அளவீடுகள் இருக்காது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதிகள் தேவையில்லை.
“Vaccinated Travel Framework – தடுப்பூசி பயணக் கட்டமைப்பு” எனப் பெயரிடப்பட்ட புதிய பயணத் திட்டம், தற்போதுள்ள தடுப்பூசி பயண பாதை -VTL திட்டத்துக்கு மாற்றாக வரும்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg