பெடோக் ரிசெர்வாயரில் ஆடவர் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டெடுப்பு

பெடோக் ரிசெர்வாயரில் (Bedok Reservoir) நேற்று காலை, சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டறியப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் காலை 7 மணிக்கு முன்னதாக நடந்ததாக கூறப்படுகிறது. 76 வயதுடைய ஆடவர் அவர் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

உதவிக்காக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

உடல் மீட்கப்பட்ட பின்னர் துணை மருத்துவர்கள் அவர் ​​இறந்ததை உறுதிப்படுத்தினர்.

காவல்துறையின் ஆரம்ப விசாரணையில், சதிச்செயல் ஏதும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.

கூடுதல் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Related Articles

Back to top button