கெயிலாங் ஈஸ்ட் பார்க் அருகே இறந்து சடலமாக கிடந்த நபர் – யார் அவர்?

கெயிலாங் ஈஸ்ட் பார்க் அருகே இன்று (ஆகஸ்ட் 5) காலை கால்வாயில் இறந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காலை 9 மணியளவில் பார்க் முழு பகுதியும் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு இயந்திரம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் அங்கு இருந்தனர்.

அந்த உடலை நேரில் பார்த்த சாட்சியின்படி, பாதி உடை அணிந்த நிலையில் அந்த சடலம் வடிகாலில் இருந்தது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட கால்வாய் அருகே சிறு அளவில் ரத்தமும் காணப்பட்டது.

Related Articles

Back to top button