“கோவை-சிங்கப்பூர்” இடையே பறக்கும் பயணிகளுக்கு செம்ம நியூஸ்! – வாரம் ஏழு நாட்களும் வழக்கமான விமான சேவை!

Published On: March 21, 2022
COVID-19 vaccination status travel

“கோவை-சிங்கப்பூர்” இடையே பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கனிவான தகவல் என்றே கூறலாம்.

வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் கோவை – சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை தொடங்க உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.

லிட்டில் இந்தியாவில் தினமும் பூனை, எலி விளையாட்டு… “கோட் வேர்ட்”வுடன் சட்ட விரோத செயல் – அதிர்ச்சி தகவல்!

அதனை அடுத்து, கொரோனா வேகம் சற்று குறைந்ததும் கோவை-அமீரக சார்ஜா இடையே விமான சேவை துவங்கியது.

பின்னர் கடந்த ஜன. மாதம் முதல் கோவை-சிங்கப்பூர் இடையே விமான சேவை ஆரம்பித்தது.

இதனை Scoot நிறுவனம், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே வழங்கி வந்தது.

இந்நிலையில், கோவை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை மார்ச் 27 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

பயணிகள் பயன்பெறும் வகையில், கோவை – சிங்கப்பூர் இடையே வாரம் ஏழு நாட்களும் விமான சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்து வந்த தமிழக ஊழியர்: “மனைவி கொடுத்த புகார்” – ஊழியரை தூக்கிய போலீசார்!

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் ஊழியர் அதிரடி கைது – இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்!