சிங்கப்பூரில் கட்டிட பராமரிப்பு பணியின்போது 7 மாடி கீழே விழுந்து “பொறியாளர்” பலி

சிங்கப்பூரில், கட்டிட பராமரிப்பு பணியின் போது சுமார் 7 மாடியில் இருந்து கீழே விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
அலுவலக கட்டிடமான CapitaSpring பராமரிப்பு பணியை மேற்கொண்ட சிங்கப்பூர் பெண் பொறியாளர் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) கீழே விழுந்தார்.
48 வயதான அவர், கட்டிடத்தின் 16 வது மாடிக்கு மேலே பராமரிப்பு மட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவர் தவறான கூரை பேனலை மிதித்தார்.
பின்னர் அவர் 30மீ கீழே விழுந்தார், அதாவது ஒன்பதாவது மாடியில் விழுந்ததாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg