வெளிநாட்டு கட்டுமான ஊழியர் எதிர்கொண்ட வறுமை; கடை உடைத்து திருட்டு….சிறை தண்டனை விதிப்பு!

மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை!

அங் மோ கியோ MRT நிலையத்தில் உள்ள பேக்கரியில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் மூன்று ரொட்டித் துண்டுகளையும், மேலும் பணத்தையும் திருடிச் சென்றதாக சிங்கப்பூர் யாஹூ செய்தி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் கைரேகைகள் படாமல் இருக்க ஊழியர் தனது கைகளில் பிளாஸ்டிக் பைகளை அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“Work Permit” CMP வெளிநாட்டு ஊழியர்கள் இனி இப்படி தான் சிங்கப்பூருக்குள் வர முடியும் – புதிய விதிமுறையின் முழு தொகுப்பு!

இருப்பினும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக அன்றைய தினமே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றத்தை ஊழியர் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் வியட்நாம் நாட்டை சேர்ந்த அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

33 வயதான அவருக்கு பொருளாதார பிரச்சினை இருந்துள்ளது. அவர் இதற்கு முன்பு அந்த பேக்கரியில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடையின் பின்கதவு சில மணிநேரங்களுக்கு பூட்டாமல் இருக்கும் என்பதை அறிந்த அவர் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்றது.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் அடிமட்ட சம்பளத்துக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர் – “எதிர்கொள்ளும் பிரச்சனையும், முடிவில்லா வேதனையும்”

Related Articles

Back to top button