சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை – தூக்கி எறிந்த சிகரெட்… சிக்கிய ஊழியர் – இந்த தப்பை செய்யாதீங்க!

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் சிகரெட் துண்டை சாக்கடையில் எறிந்ததற்காக தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

ஆமாங்க, சிகரெட் துண்டை சாக்கடையில் எறிந்ததற்காக அவருக்கு $300 அபராதம் செலுத்துபடி அதிகாரி கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – மீறினால் அனுமதி ரத்து

ஆனால், அவர் அமலாக்க அதிகாரியிடம் லஞ்சமாக S$100 கொடுத்து தப்பிடலாம் என எண்ணி அதை கொடுக்க முயன்றதில் சிக்கி கொண்டார்.

41 வயதான வங்கதேச நாட்டவரான கான் முகமது ஆலமின் என்பவருக்கு நேற்று (ஜூலை 26) நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த குற்றம் கடந்த பிப்ரவரி 3 அன்று நடந்தது. ஊழல் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் தமிழர்.. சொந்த வீட்டில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் – உஷாராக இருங்க நண்பர்களே!

சட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்

சிங்கப்பூரில் இதுபோன்ற ஊழல் குற்றத்தில் சிக்கினால், S$100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விமான உணவில் பாம்பு தலையா!! என்னங்க சொல்றிங்க… அலறும் விமான பயணிகள்!

 

 

Related Articles

Back to top button