சிங்கப்பூர் ION ஆர்ச்சர்ட் மால் 4 நாள்களுக்கு மூடப்படும்

இன்று முதல் ION ஆர்ச்சர்ட் மால், 4 நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்கு 3 தொற்று சம்பவங்கள் உறுதியானதைத் தொடர்ந்து சுத்திகரிப்புப் பணிகளுக்காக அது மூடப்பட உள்ளது.
இதையும் படிங்க : பெரும் இக்கட்டான தொற்று சூழலில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிறிஸ்தவ அமைப்புகள்!
இந்த தகவலை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த 4 நாள்களுக்குள், கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த மாதம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அங்கு சென்றுவந்த பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சகம் முன்வந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தளர்த்தப்பட உள்ள தற்போதைய கட்டுப்பாடுகள்..!