சிங்கப்பூரில் காணாமல் போன நபர் – ஆற்றில் சடலமாக மிதந்தார்: செய்தி அறிந்து கதறும் குடும்பம்

பாண்டன் ஆற்றில் காணாமல் போன ஆடவரின் உடல் நேற்று (22 ஆகஸ்டு) கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை தேடும் குழு West Coast லிருந்து தனது தேடல் பயணத்தை தொடங்கியது.
பாண்டன் ஆற்றின் வழியாகச் சென்றபோது, தண்ணீரில் மிதக்கும் “கோணி சாக்கு” மிதப்பது போன்ற தோற்றத்தைக் கண்டனர்.
இதனை அடுத்து அருகில் வந்து பார்த்தபோது, வெள்ளை முடி மற்றும் பச்சை குத்தப்பட்டதை பார்த்து அது மனித சடலம் என்பதை உணர்ந்தனர்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (ST) படி, பின்னர் 60 வயது ஆணின் உடலை போலீசார் நீரில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர்.
பாண்டன் ஆற்றில் தவறி விழுந்ததாகக் கருதப்படும் இவரை, அவரது உறவினர்கள் நேற்றுமுன்தினம் காணவில்லை என்று கூறியிருந்தனர்.
அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.