அடிமட்ட சம்பளத்துக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களை பெரிதும் நம்பியிருக்கும் நாடு சிங்கப்பூர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிங்கப்பூரில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவிவருவது உண்மை.
குப்பைகள் சேகரிக்கப்படாமல் இருப்பது, வீட்டுத் தோட்டங்களில் உள்ள பொதுவான பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது மற்றும் கட்டுமானத் திட்டப்பணிகள் தாமதம் ஆகிய காரணங்களால் அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாக செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், வளர்ந்த உலக நாடு என்று அழைக்கப்படும் சிங்கப்பூரில், வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது ரொம்ப முக்கியான ஒரு விஷயம்.
வலிகள் நிறைந்த வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை
நெரிசலான தங்கும் விடுதிகளில், வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு சிறைத் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைப் போல மாறினர் என்பது ஒரு வாதமாக இருந்து வருகிறது.
அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று வேறொரு பிரபஞ்சத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்தது.
இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் ஏறலாம்.
லாரி
அது ஒரு புறம் இருக்க லாரிகளில் ஏற்றிச்செல்லப்படுவதால் பயங்கரமான இரு விபத்துக்கள் ஏற்பட்டன.
அதற்கு அரசாங்கம் மாற்று நடவடிக்கைளை மேற்கொண்டாலும், முதலாளிகள் ஏதாவது காரணம் காட்டி அதை ஓரம் கட்டி விடுகின்றனர்.
சம்பளம்
சம்பளம் என்பது ஒரு ஊழியரின் குடும்ப நலனை பிரதிபலிக்கும் ஒரு கேடயம் என்றே சொல்லலாம்.
ஆனால் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் இன்னமும் தங்களுக்கு சொன்னச் சம்பளம் சரியாக கிடைப்பதில்லை என்ற வார்த்தைகளுடன் வாழ்ந்தும் வருகின்றனர்.
குடும்ப பிரச்சனை, பொறுப்புகள், கடைமைகள், வலிகள் நிறைந்த வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக்கு நல்ல விடிவு காலம் பிறக்க கடவுளை பிராத்திப்போம்.
வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!
Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg