சிங்கப்பூரில் பூனையை கொடூரமாக நெருக்கி கொன்ற பெரிய மலைப்பாம்பு – தீயாய் பரவும் காட்சிகள்!

Published On: August 24, 2022
python-strangle-cat-jurong-west

ஜூரோங் வெஸ்டில் மலைப்பாம்பிடம் சிக்கிய பூனை ஒன்று கொடூரமாக உடல் நெரித்து இறந்த நிலையில் காணப்பட்டது.

ஃபேஸ்புக்கில் வெளியான இரண்டு புகைப்படங்களில் மலைப்பாம்பு அந்த பூனையை சுற்றி நெருக்குவதையும், அதன் பிறகு அது உயிரிழந்து பரிதாபமாக கிடப்பதையும் காணமுடிகிறது.

சிங்கப்பூர் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு ஊழியர்; இரு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

இந்தச் சம்பவம், பிளாக்ஸ் 490 முதல் 499 ஜூரோங் வெஸ்ட்டில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இதனை கண்டு மக்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள், Long-term, Short-term பயணிகள், தடுப்பூசி போடாதோருக்கு முக்கிய அறிவிப்பு!