சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு அக். முதல் சம்பளம் உயர்வு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்

சிங்கப்பூர் குறிப்பிட்ட சேவை பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது.

சிங்கப்பூர் பொதுச்சேவை பிரிவை (PSD) சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் 5 % இல் இருந்து 12% வரை உயரவுள்ளது.

இந்த குழுக்களுக்கான சம்பளம் கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு 2007-2008 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தின் மூலம் சுமார் 300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் 30 நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ நியமனம் பெற்றவர்கள் பயனடைவார்கள்.

அவர்களுக்கான இந்த சம்பள உயர்வு அடுத்த அக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Back to top button