சிங்கப்பூரில் வாரத்தில் நான்கு நாள் வேலை? – ஊழியர்களுக்கு சம்பளம் குறையுமோ என அச்சம்

சிங்கப்பூரில் வாரத்தில் நான்கு நாள் வேலை முறை தொடர்பாக முதலாளிகளும் ஊழியர்களும் நெகிழ்வான மனநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகத்தின் இணை அமைச்சர் கன் சியோவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை (செப். 13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாரத்தில் நான்கு நாள் வேலை நடைமுறை என்பது சில முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றார் போல நன்றாக இருக்கலாம்.
ஆனால், மற்றவர்களுக்கு அது ஏற்றதாக இருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டு சொன்னார்.
நெகிழ்வான மாற்றத்தக்க கூடிய வேலைவாய்ப்பு குறித்து மனிதவள அமைச்சகம் பரிந்துரைக்கும் ஏற்பாடுகளில் இந்த வாரத்துக்கு 4 நாள் வேலை முறையும் அடங்கும் என்று திருமதி கான் கூறினார்.
இதில் திறமை, செலவுகள் மற்றும் ஊழியர்களின் நலன் ஆகியவை குறித்த அக்கறைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் குறைவானால், ஊழியர்கள் அதிகமாக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் சம்பளம் குறையுமா என்ற அச்சமும் பலரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு அக். முதல் சம்பளம் உயர்வு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்