ஊழியர்களுக்கு SafeEntry நுழைவை உறுதிசெய்ய தவறிய 26 நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு

சிங்கப்பூரில் கடுமையாக்கப்பட்ட 2ம் கட்டத்தில், சுமார் 65க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் கோவிட்-19 பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மீறியுள்ளது என கட்டிட, கட்டுமான ஆணையம் (BCA) இன்று (ஜூன் 2) தெரிவித்துள்ளது.

SafeEntry நுழைவு சோதனையை மேற்கொள்ளாமல், 26 நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் அல்லது வருகையாளர்களை பணிநிலையங்களுக்குள் அனுமதித்துள்ளன.

சிக்கிய 2 பணியிடங்களில், COVID-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நுழைய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் எஞ்சியுள்ள ஊழியர்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயத்தை அந்நிறுவனங்கள் ஏற்படுத்தியதாக BCA தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button