சிங்கப்பூரில் 15 புதிய COVID-19 பாதிப்புகள் பதிவு – MOH

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 18) நண்பகல் வெளியான தகவலின்படி, 15 புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அவர்கள் சிங்கப்பூர் வந்ததில் இருந்தே வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று சுகாதார அமைச்சகம் புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக ஆறாவது நாளாக உள்நாட்டில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் SafeEntry Gateway எனப்படும் புதிய முறை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள், சமூக மருத்துவமனைகள் போன்றவற்றில் அது செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button