சிங்கப்பூரில் 1.8 மில்லியன் மக்கள் முதல் டோஸ் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

இதுவரை சிங்கப்பூரில் சுமார் 1.8 மில்லியன் மக்கள் முதல் டோஸ் COVID-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதே போல, அவர்களில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் தங்களது 2வது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் அல்லாமல் பேருந்துகளில் கொண்டுசெல்வதில் உள்ள சிக்கல்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகமானோர் முன்வரும் இந்த நிலை ஊக்கமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக வயதானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி குறித்த அழைப்பு, இந்த மே மாத இரண்டாம் பாதியில் இருந்து கட்டங்கட்டமாக தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்கசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரித் தள்ளுபடி அதிகரிப்பு

Related Articles

Back to top button