சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் இந்தியர் உட்பட இருவருக்கு தொற்று

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் இரண்டு ஊழியர்கள் உள்நாட்டு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் 33 ஹார்பர் டிரைவில் உள்ள பாசீர் பஞ்சாங் ரெசிடென்ஸ்- இல் வசித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக அவர்கள் இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருவர் 35 வயதான மியான்மர் நாட்டவர் என்றும், இன்னொருவர் 23 வயதான இந்தியர் என்றும் அமைச்சகம் குறிப்பிடுகிறது.

இருவரும் கப்பல்களில் பணியாற்றுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Related Articles

Back to top button