திருச்சி விமான நிலையத்தில் இனி 5 மணிநேரம் காத்திருக்க வேண்டும் – கடும் அவதியில் பயணிகள்

சிங்கப்பூர் உட்பட தொற்று பாதிப்பு அதிகம் என்றும் சில நாடுகளை இந்தியா அபாய பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்த பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான சோதனை கட்டாயம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதில், பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கட்டாய PCR பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கு காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது.
பரிசோதனை முடிவுகளை அறிய சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும், அவர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி விமான நிலைய இயக்குனர் எஸ்.தர்மராஜ் கூறியுள்ளார்.
கூடுதலாக உறவினர்கள் பயணிகளை அழைத்துச்செல்ல 5 மணிநேரம் தாமதமாக வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.