இந்தியாவில் பெண்ணிடம் நட்பாக பழகி நாசம் செய்த சிங்கப்பூர் இளைஞர் – சுற்றுலா சென்றபோது பலே வேலை

Published On: August 30, 2022
hsa-charges-case-of-smuggling

சிங்கப்பூர்: இந்தியாவில் பெண் ஒருவரிடம் நட்பாக பழகி அவரை நாசம் செய்த பலே சிங்கப்பூர் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் இமாச்சல பிரதேசம் – மணாலி என்ற சுற்றுலா தளத்திற்கு சிங்கப்பூர் இளைஞர் சுற்றுலா சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை ஊழியர்… ஓடாய் தேய்ந்து உழைத்த 1½ லட்சம் பறிபோன சோகம் – எச்சரிக்கை

அங்கு சுற்றுலா வந்த 38 வயது ரஷிய நாட்டை சேர்ந்த பெண், தனது தாயுடன் முன்னேரே ஒரு வாடகை அறையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அலெக்சாண்டர் லீ ஜியா ஜுன் என்னும் சிங்கப்பூர் இளைஞர், அந்த ரஷிய பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமானார்.

அதன் பின்னர் அவரை நட்புரீதியாக தன் ஓட்டல் அறைக்கு அழைத்த சிங்கப்பூர் இளைஞர், அவரை அங்கு வைத்தே நாசம் செய்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட ரஷிய பெண் போலீசில் புகார் அளிக்க, மணாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சிங்கப்பூரில் புதிய Work pass… மாத சம்பளம் மிக அதிகம்; வாயை பிளக்க வைக்கும் சிங்கை அரசின் திட்டம்