சிங்கப்பூரில் போலீஸ் வேன், லாரி மோதி விபத்து – 11 லாரி பயணிகள் காயம்

ஜலான் புரோ மற்றும் ஜுராங் போர்ட் சாலை சந்திப்பில் போலீஸ் வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரித் தள்ளுபடி அதிகரிப்பு

அதில் லாரியில் பயண செய்த 11 பேர், லாரி ஓட்டுநர் மற்றும் 5 காவல் அதிகாரிகள் ஆகியோர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த மே 7 இரவு 9.02 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

20 முதல் 44 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் சிறு காயங்களுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்கஒர்க் பாஸ் அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது!

Related Articles

Back to top button