‘Work Pass’ அனுமதி பெற போலியான கல்வித் தகுதியை வழங்கிய இந்திய ஊழியர்களுக்கு சிறை!

சிங்கப்பூரில் ‘Work Pass’ வேலை அனுமதி பெற போலியான கல்வித் தகுதியை வழங்கிய இந்திய ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலியான கல்வித் தகுதியை சமர்ப்பித்த 2 இந்திய ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள், தங்களது work pass அனுமதி விண்ணப்பங்களில் தவறான கல்வித் தகுதிகளை மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) சமர்ப்பித்துள்ளனர்.

இதில், பெயில்வால் சுனில் தத்க்கு ஒரு வார சிறைத்தண்டனையும், சூத்ரதர் ​​பிஜோய் என்பவருக்கு நான்கு வாரம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் Work pass ரத்து செய்யப்பட்டு, அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளனர் என்று MOM தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button