சிங்கப்பூரில் வேலையின்போது சாக் அடித்து ஊழியர் இறப்பு… முழுக்க முழுக்க முதலாளி தான் பொறுப்பு

சிங்கப்பூரில் தன்னுடைய ஊழியருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்காமல், அவர் இறப்பிற்கு காரணமாக இருந்த முதலாளி பெண்ணுக்கு S$100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் வேலையில் ஈடுபட்டு இருந்தபோது மின்சாரம் பாய்ந்தத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
இரும்பு சுருள் ஷட்டரை அவர் சரிசெய்து கொண்டிருக்கும்போது, அவர் நின்ற அலுமினிய ஏணியில் மின்சாரம் பாய்ந்து அவர் மரணத்தை சந்தித்தார்.
31 சாங்கி சவுத் அவென்யூ 2ல் உள்ள கட்டிடத்தில் Tan Kim Seng என்ற நிறுவனத்தின் கீழ் வேலை செய்த திரு டோங் பாரோங் என்ற ஊழியர் இறந்தார்.
இந்த நிலையில் தனது ஊழியர்களின் முழு பாதுகாப்பு, வாழ்வாதரத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதலாளி எடுக்க தவறிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் 2019 நவம்பர் மாதம் இந்த இறப்பு ஏற்பட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… தூக்கி சென்று நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறையில் அடைப்பு