சிங்கப்பூரில் கட்டுமான வேலைக்கு வந்த தமிழக ஊழியர் – இன்று 7 கடைகளுக்கு சொந்தக்காரர்; மெய் சிலிர்க்கும் தமிழரின் வரலாறு!

லிட்டில் இந்தியாவில் முதலில் கடையை தொடங்கினார்!

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக கடுமையாக உழைத்த திரு. ராம மூர்த்தி என்ற தமிழக ஊழியரின் கதையை பற்றி பார்ப்போம்.

20 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்த அவர் கட்டுமானத் துறையில் ஊழியராக தனது பயணத்தை தொடங்கினார். ஆனால், இன்று அவர் 7 கடைகளுக்கு சொந்தகாரர்.

சாங்கி ஏர்போர்ட்டில் பலே திட்டம் போட்ட இரு வெளிநாட்டு ஊழியர்கள்; தமிழ் வம்சாவளி ஊழியருக்கு சிறை!

வெளிநாட்டு ஊழியர்ளுக்கான பொழுதுபோக்கு நிலையத்தில் அவரின் இரண்டு கடைகள் அமைந்துள்ளது.

12 ஆண்டுகள் சேமித்த பணத்தை கொண்டு 2005ஆம் ஆண்டு திரு மூர்த்தி தனது கடையை தொடங்கினார்.

அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன், தன் கட்டுமான வேலையை உதறிவிட்டு லிட்டில் இந்தியாவில் கடையை முதலில் தொடங்கினார்.

சிங்கப்பூரில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர்; விதிகள் மீறப்பட்டதே காரணம்

தற்போது, அவரின் பெரும் முயற்சி காரணமாக இன்று அவர் 7 கடைகளுக்கு சொந்தகாரர் என்ற பெருமையுடன் தலைநிமிர்ந்துள்ளார் திரு மூர்த்தி.

“நானும் ஊழியராக சிங்கப்பூரில் இருந்துள்ளேன், அதனால் ஊழியர்கள் படும் கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது” என்றார். இதன் காரணமாக நிறைய உதவிகளை அவர்களுக்காக செய்து வருகிறார் திரு மூர்த்தி.

“கடந்த காலத்தில், தங்கும் விடுதியில் ஊழியர்களுடன் ஒன்றாக தங்கியிருந்த சூழலில், ​​நாங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம்” என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் உயர லிஃப்டில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள்; திடீரெனெ அறுந்த கேபிள் – கதறிய ஊழியர்கள்

Related Articles

Back to top button