Work permit, S Pass, தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அக்டோபர் 1, 2022 முதல் புதிய நடைமுறை!

Work pass Singapore : சிங்கப்பூரின் கோவிட்-19 நெறிமுறைகள் தொடர்பாக தொடர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் Work pass வைத்திருப்பவர்களுக்கான தடுப்பூசி தேவைகளையும் சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

நீண்ட கால அனுமதி மற்றும் Work pass அனுமதி பெறுவதற்கான அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் அனுமதி நிபந்தனையாக COVID-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நடைமுறை தொடரும்.

முகக்கவச தளர்வுகள் மற்றும் எல்லை நடவடிக்கைகள் போன்ற தளர்வுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதையும் Tamil daily Singapore பதிவிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள், Long-term, Short-term பயணிகள், தடுப்பூசி போடாதோருக்கு முக்கிய அறிவிப்பு!

ஏற்கனவே உள்ள Work passes அனுமதி புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

Training work permit மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு work permit அனுமதிகளைப் புதுப்பிப்பதற்கும் முழு தடுப்பூசி நிலை தொடர்ந்து தேவைப்படும்.

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர் தற்கொலை – தமிழ்நாட்டில் பெண் மர்ம சாவு… சில மணிநேரங்களில் நடந்த கொடூரம்

யாருக்கு பொருந்தும்:

கட்டுமானம், கடல் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ள ஊழியர்கள் அல்லது தங்கும் விடுதிகளில் வசிப்பவர்களுக்கு பொருந்தும்.

இந்த திருத்தம் செய்யப்பட்ட தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் வரும் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.

சிங்கப்பூரில் தொடரும் ஊழியர் மரணம் – லாரி மோதி பரிதாபமாக பலியான ஊழியர்

Related Articles

Back to top button